நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்
நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்
onlinesalahi.blogspot.com
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் (அவனுடைய)தூதரக்குக் கீழ்ப்படியுங்கள்.(மாறுசெய்து)உங்களுடைய செயல்களை வீணாக்கியும் விடாதீர்கள்.(அல் குர்ஆன் 47:33)
அல்லாஹ் சிலர் சிலரை விட மேன்மையாக்கி வைத்திருக்கின்றான்.
புகழால்,பதவியால்,செல்வத்தால்,படிப்பால்,கல்வியால் பல படித்தரங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றான்.அல்லாஹ் நமக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் செய்த அமல்களை வீணடிப்பதற்கு பல காரணம் இருந்த போதிலும் இரண்டு முக்கியமானவை.
1,الحسد பொறாமை
2,رياء முகஸ்துதி
முதலாவதாக பொறாமை:
நமக்கு முன்னாள் உயர்நிலையில் இருப்பவரை கண்டு பொறாமை படுவது, நாம் செய்யும் அமல்களை அழித்து விடும்.
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது .அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொறாமை சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடிய நோயாகவும் இருக்கிறது. அன்பு கொண்டு பழக முடியாமல் தன்னைத் தானே நொந்து கொண்டு வாழ்வதை பார்க்க முடிகிறது.
رواه أبو داود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத்
இந்த பொறாமையின் எல்லை எது வரை ?
இந்த பொறாமை கொலை வரை சேர்த்து விடும் அளவிற்கு கொடிய நோய்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
وَاتْلُ عَلَيْهِمْ
نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ
مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ
قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقينلَئِنْ
بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ
إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ
أَصْحَابِ النَّارِ وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ
قال الله تبارك وتعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمِل عملًا أشرك فيه معي غيري، تركتُه وشِرْكَه رواه مسلم.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்
கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை
விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும்
கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)
عَنْ سَلَمَةَ قَالَ سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (நூல் :புஹாரி )
நாம் செய்யும் அமல்களை முகஸ்துதிக்காக செய்யும்பொழுது அமல்கள் அனைத்தும் வீணடிக்கப்படுகிறது.
தொழுகை,தர்மம்,ஹஜ்,நோன்பு,பொது சேவைகள் இப்படி பல காரியங்களை முகஸ்துதிக்காக செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தொழுகை:
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ * الَّذِينَ
هُمْ عَنْ صَلاتِهِمْ سَاهُونَ * الَّذِينَ هُمْ يُرَاءُونَ
மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள் . அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள் . அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
இன்று முஸ்லிம்களிடத்தில் பிரதான ஒரு அமல் என்று சொன்னால் தொழுகைதான்.
நபிமார்களும்,ஸஹாபாக்களும்,நல்லோர்கள்,இமாம்கள் போன்றவர்களெல்லாம் இறைச்சத்துடன் தொழுது வந்ததையும்,நபி (ஸல்)அவர்கள் தொழுகையின் இறைச்சமும்,பேணுதலும்,அதன் முக்கியத்துவமும் குறித்து எவ்வளவு ஆழமாக சொல்லியிருப்பார்கள்.
عن أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ : إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ
عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ
فَقَدْ خَابَ وَخَسِرَ
அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மறுமை நாளில் முதன் முதலில் தொழுகையைப் பற்றியே விசாரனை செய்யப்படும். அது ஒழுங்காக பரிபூரணமாக நிறைவேற்றியிருந்தால் அவனுடைய மற்ற அமல்களும் சரியாகவே இருக்கும். அது ஒழுங்காக இல்லாதிருந்தால் அவனுடைய மற்ற அமல்களும் சீர்கெட்டதாகவே இருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:திர்மிதி)
وعن أبي سعيد الخدري - رضي الله عنه - قال : خرج
علينا رسول الله - صلى الله عليه وسلم - ونحن نتذاكر المسيح الدجال ، فقال
: " ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال ؟ " فقلنا : بلى
يا رسول الله ! قال : " الشرك الخفي ، أن يقوم الرجل فيصلي ، فيزيد صلاته لما يرى من نظر رجل " رواه ابن ماجه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள்
தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம்
வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை
அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு
அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக
நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை
அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.
தர்மம் :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ
وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)
இறைவன் கொடுத்த அருட்கொடைகளை பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்று பல நபிமொழியில் வந்துள்ளது. எவர் இறைபொருத்ததிற்காக செலவழிக்காமல் பிறர் பார்க்க வேண்டும் புகழ வேண்டும் என்று தர்மங்களை கொடுப்பவரின் நிலமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்) இறைவன் இவரை பார்த்து உலகில் உனக்கு நான் செல்வத்தை தந்தேனே அதை எவ்வழியில் செவழித்தாய் என்பான். அந்நபர் இறைவா நான் உன் வழியில்தான் செலவிட்டேன் என்பான். இறைவன் எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழ வேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய் என்று கூறி அவரை முகம் குப்புர நரகத்தில் இழுத்துச் சென்று போடுவான். (ஆதாரம்: முஸ்லிம்)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
"செய்த உதவியை
சொல்லிக் காட்டுபவனை மறுமை நாளில் இறைவன் பார்க்கவும் மாட்டான்;
தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவனே நஷ்டவாளி" என்றார்கள். அறிவிப்பவர்:
அபூதர்(ரலி); நூல்: முஸ்லிம்
عن أبي ذر، عن النبي صلى الله عليه وسلم قال:
((ثلاثةٌ لا يكلمهم الله يوم القيامة، ولا ينظر إليهم، ولا
يزكيهم، ولهم
عذابٌ أليمٌ))، قال: فقرأها رسول الله ثلاث مرارٍ، قال أبو ذر: خابوا
وخسروا، من هم يا رسول الله؟ قال: ((المسبل إزاره، والمنان، والمُنَفِّقُ
سلعته بالحلف الكاذب))؛ رواه مسلم.
அவர்கள் எத்தகையோரென்றால்,தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள்.
அவர்கள் எத்தகையோரென்றால்,தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள்.
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால்,ஜகாத்தை(முறைப்படி பேணுதலாக)செய்து விடுகிறவர்கள்.(இவர்கள் வெற்றியாளர்கள்) (அல் குர்ஆன் 23:2,4)
மேலும்
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا
மேலும் அ(ல்லாஹ்வாகிய அ )வன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும்,அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
(உணவை உண்போரிடம்)"உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம்,அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்.உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ,அல்லது (நீங்கள் நமக்கு)நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை(என்று நல்லடியார்கள் கூறுவார்கள்) (அல் குர்ஆன் 76:8,9)
ஆனால் (முனாஃபிக்) நயவஞ்சகனிடத்தில் மேற்காணும் இரண்டு (கெட்ட)குணங்களும் இருக்கும்.
தன் அல்லாஹ் திருமறையில் கூறுவான்:
إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக்கருது)கின்றனர்:இன்னும் அவனோ,அவர்களை வஞ்சிக்கக்ககூடியவனாக இருக்கின்றான்.இன்னும்,அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால்,சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள்.மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள்.இன்னும்,அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை.(அல் குர்ஆன் 4:142)
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக்கருது)கின்றனர்:இன்னும் அவனோ,அவர்களை வஞ்சிக்கக்ககூடியவனாக இருக்கின்றான்.இன்னும்,அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால்,சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள்.மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள்.இன்னும்,அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை.(அல் குர்ஆன் 4:142)
நபி(ஸல்)அவர்கள் இறைநம்பிக்கையாளர்,நயவஞ்சகர்,இறைமறுப்பாளர் ஆகிய மூவருக்கும் மூன்று பேர் கொண்ட குழுவொன்றை உவமையாக் கூறுவார்கள்:
அவர்கள் மூவரும் ஆற்றுக்குப் போனார்கள்.முதலில் இறைநம்பிக்கையாளர் ஆற்றுக்குள் இறங்கி அதைக் கடந்து (பத்திரமாக மறு கறைக்குச்)சென்றார்.
அடுத்து நயவஞ்சகர் இறங்கினார்.அவர்(மறு கரையிலிருந்த)இறைநம்பிக்கையாளரைச் சென்றடையப் போனபோது (எதிர் கரையில் இருந்த)இறைப்பறுப்பாளர் "இதோ!என்னிடம் வந்துவிடு,உனக்கு ஏதேனும் அபாயம் நேரலாம் என நான் அஞ்சுகிறேன்"என்று அவரை அழைத்தார்.உடனே இறைநம்பிக்கையாளர் "இதோ என்னிடம் வந்துவிடு இன்னின்ன வசதிகள் யாவும் உள்ளன"என்று தம்மிடம் உள்ளவற்றைப் பட்டியலிட்டுக் கூறினார்.அப்போது அந்நயவஞ்சகர் (யாரிடம் செல்வது என்று தெரியாமல்)அவ்விருவருக்கிடையே தீராத தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டார்.இறுதியில் வெள்ளம் வந்து அவரை மூழ்கடித்தது.
அவ்வாறுதான் ஒரு நயவஞ்சகர் தமக்கு இறப்பு வரும்வரை சந்தேகத்திலும்,ஐயத்திலும் இருந்து கொண்டே இருப்பார்.
(பார்க்க:இப்னு கஸீர்)
ஆகவே நயவஞ்சகனின் தன்மையை விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்று வாழ்ந்த நல்லோர்களைப் போன்று வாழ தவ்பிக் செய்வானாக!
முஹம்மது இப்னு அஸ்லம் (ரஹ்)அவர்களின் பணிவிடையாளர் முஹம்மது இப்னுல் காஸிம் தமது எஜமான் கூறியதாக சொல்கிறார்கள்:
"எனது இரண்டு மலக்களும் கூட என்னைப் பார்க்க முடியாமல் மறைந்திருந்து அமல்செய்யும் வாய்ப்பு இருந்தால் நான் அதையும் செய்திருப்பேன்.
அதேபோல ஒருமுறை அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.பிறகு அந்த அறையிலிருந்து அழும் சப்தமும் வந்து கொண்டிருந்தது.இது சம்மந்தமாக
அவர்களின் மனைவியிடம் கேட்கப்பட்டபோது,"முஹம்மது இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் இந்த வீட்டிற்க்குள் சென்று குர்ஆனை ஓதி ஓதி அழுவார்கள்.அறையைவிட்டு வெளியே வரும்போது தாம் அழுதது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முகத்தைக் கழுவிக் கொள்வதோடு,கண்ணுக்கு சுர்மாவும் இட்டுக் கொள்வார்கள்"என்பதாக பதில் கூறினார்கள்.(நூல்:ஸஹீஹ் வஸாயர் ரஸூல் 3/302)
நமது முன்னோர்கள் பிறருக்குக் காட்டுவதற்காக செய்தால் தாங்கள் செய்த நல்ல அமல்கள் அழிந்து போய் விடுமோ என்று பயந்து இந்த அளவிற்கு மறைந்து மறைந்து அமல் செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
من أحب لله و أبغض لله و أعطى لله و منع لله فقد استكمل الإيمان
யார் அல்லாஹ்விற்காக பிரியம் கொளவ்தும்,அல்லாஹ்விற்காக வெறுப்பதும்,அல்லாஹ்விற்காக கொடுப்பதும்,அல்லாஹ்விற்காக மறுப்பதும் ஈமானின் பரிபூரணமாகும்.(நூல் அபூதாவூத்)
எனவே அல்லாஹ்விற்காவே அமல் செய்து மேற்காணும் கெட்ட குணத்தை விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !ஆமீன்
குறிப்பு தந்தவர்கள்:
ஸலாஹி உலமா பேரவை.
தொகுத்து வழங்கியவர்:
கம்பம் சுல்தான் ஸலாஹி.
அ லா
الحمد لله
ReplyDeleteபாரகல்லாஹ்
ReplyDelete