இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்

        இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்
اقترب للناس حسابهم وهم في غفلة معرضون
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
ஈமான் கொணடவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும்
இத்தூதருக்கும் வழிபடுங்கள்–உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
அல்குர்ஆன் 47:33
முஸ்லிம்களின் வாழ்வில் வேற்றுக் கலாசாரத்தின் ஊடுருவல் எல்லை மீறிப்போய் விட்டது. அவர்களின் சிந்தனையும் திசை திருப்பப்பட்டு விட்டது. அவர்களின் நம்பிக்கையும் நோக்கமும் நிலை குலைந்து விட்டன. அவர்களின் ஒழுக்கம் அழிந்தே போய் விட்டது. எங்கும் துரோகமே தலை விரித்தாடுகின்றது.
 இன்று கலிமா சொன்னவர்களாகவும்,அதன்படி அமல் செய்தாகினும் நமது கண்களுக்கு முன் அனாச்சாரம்,அட்டுழீயம், லஞ்சம்,ஊழல்,வட்டி
,மார்க்கத்திற்கு மாறான தலைமை பதவி,கொலை,திருட்டு, விபச்சாரம்,
நேர்மையற்றவை,என்று பல கோணங்களில் வருவதையும்,வாழ்ந்து 
கொண்டிருக்கும் சமூகங்களையும் பார்க்கிறோம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இந்நேரத்தில் நமது ஈமானை (இறைநம்பிக்கை) இழந்து விடாமல்,ஈமானில் உறுதியாக இருப்பதும்,அதன்படி புரிந்து அமல்
செய்வதும் நம்மீது கடமையல்லவா?இன்று நாம் வாழும் சில நிகழ்வுகள்
உலக அழிவு அடையாளமாகவும் காணமுடிகிறது.
இன்றைய இஸ்லாமியர்கள் யூதர்களின் சூழ்ச்சிக்கும்,பல நெருக்கடிக்கும் ஆபத்துகளுக்கு மத்தியில் ஆளாக்கப்படுவதையும் வருத்தத்தோடு பார்க்கிறோம்.
ஒரு பக்கம் யூதர்களின் நெருக்கடி,மறுபக்கம் அரசியல் நெருக்கடி,இராணுவ அடிப்படையில் நெருக்கடி,பொருளாதார நெருக்கடி கலாச்சார நெருக்கடி என பல சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் சந்தித்து வருவதையும் பார்க்கிறோம்.

பின் வரும் சமுதாயத்தை பற்றி நபியவர்கள் கூறியவை :

قال رسول الله - صلى الله عليه وسلم - : " يوشك الأمم أن تداعى عليكم 
كما تداعى الأكلة إلى قصعتها " ، فقال قائل : ومن قلة نحن يومئذ ؟ قال : " بل أنتم يومئذ كثير ، ولكنكم غثاء كغثاء السيل ، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم ، وليقذفن في قلوبكم الوهن " ، قال قائل : يا رسول الله ! وما الوهن ؟ قال : "حب الدنيا وكراهية الموت "
 أبو داود 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
”ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.” எதிரிகளுக்கு உங்களைப் பற்றிய பயம் ஈடுபட்டு போய் விடும். நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்.
அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ ?”
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.”
அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?.”
அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.” என்பதாகும்.
நூல்- அபூதாவுத்.

َّقال رسول الله صلي الله وسلم:                                                                           
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ
ضَبٍّ لَسَلَكْتُمُوهُ, قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ! الْيَهُودَ وَالنَّصَارَى, قَالَ: فَمَنْ؟
أخرجه البخاري في الصحيح 
அபூ சயீதுல் குத்ரீ (ரலி)அவர்கள் அறிவிப்பதாவது:நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தினர் முன்னோர்களின் வழிமுறையை ஒவ்வொரு ஜானாக,ஒவ்வொரு முளமாக பின் துயர்வார்கள்.எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தாலும் இவர்களும் நுழைவார்கள்.எங்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே!யூதர் மற்றும் கிருஸ்தவர்களின் வழியவா பின் துயர்வார்கள் ?என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்)அவர்கள் "பிறகு யாரை!"என்று வினவினார்கள்.
நூல் :புகாரீ 
ِஇன்றைய (மோசமான)நிகழ்வுகள்:

பதவி ஆசை 
 நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்.
  وى الشيخان البخاريُّ، ومسلمٌ في صحيحيهما، من حديث عبد الرحمن بن سمرة رضي الله عنه، قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: يا عبدَ الرحمن بنَ سمرة، لا تسأل الإمارة؛ فإنكَ إنْ أُوتِيتَهَا عن مسألة وُكِلْتَ إليها، وإنْ أوتيتَها من غير مسألة أُعِنْتَ عليها அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) “ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு“ என்று கூறினார்கள்.இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரீ.

உலக அழிவின் அடையாளம்:
நபி (ஸல்)அவர்களிடம் ஒருவர் "மறுமை நாள் எப்போது வரும் ?என்று கேட்டார்.அதற்கு நபி (ஸல்)அவர்கள் "அமானிதம்-நேர்மை இல்லாமல் போனால் மறுமை நாளை எதிர் பாருங்கள்.என்றார்கள்."அது எப்படி இல்லாமல் போகும் ? "என்று அவர் கேட்டார்.நபி (ஸல் )அவர்கள் "தகுதி இல்லாதவனிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கபட்டால் மறுமை நாளை எதிர் பாருங்கள்"என்று கூறினார்கள்.(நூல்:புகாரீ)

இன்றைய (மோசமான)நிகழ்வுகள்:
கல்வி:
அக்காலத்தில் ஆசிரியர்களின் ஊதியம் மிகக்குறைந்ததே எனினும், சமுதாயத்தில் அசைக்க முடியாத ஒரு பொறுப்பில் இருந்தனர். சமுதாய மக்கள் அனைவரின் நன்மதிப்பையும், போற்றுதலையும் பெற்றிருந்தனர். அகிலம் முழுவதும் கிலாஃபத்தின் ஆட்சி நடந்த இடங்களிலெல்லாம் இப்படியான ஒரு முன்னேற்றப்பாதையே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது, இறைவணக்கமே என்றே அர்த்தம் கொண்டிருந்தார்கள். அகிலம் முழுவதும் பரவியிருந்த இஸ்லாமிய மக்கள் எல்லோரின் மனநிலையும் இதே போல் இருந்ததால்தான் கல்வி கற்கவும், கற்பிக்கவும் தூர தேசங்களுக்கு பயணம் செய்யவும் தயங்குவார் யாருமில்லாமல் போனது.
இன்று :காணும் திசையெங்கும் இப்போது ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு, தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமியக் கல்விதான் ஒரே தீர்வு.

உலக அழிவின் அடையாளம்: 
 عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا
رواه البخاري
கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.


கல்வி உயர்த்தப் படுவது:
இன்றைய நிலை: உலமாக்களை உயர்த்துவது மூலம் கல்வி உயர்த்தப்படும்.
சமீப காலமாய் நம்மை விட்டு பிரிந்த எத்துணை பெருந்தகை உஸ்தாதுமார்கள்.(அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நிம்மதி பெறச் செய்வானாக !ஆமீன் )

 ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير

நபி ஸல் கூறினார்கள்:
''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது.''     (தப்ரானி)

அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?

அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.

إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح، ومسلم ].

''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்).

 இன்றைய (மோசமான)நிகழ்வுகள்:

 விபச்சாரம் பெருகுவது :

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள் துர்நடத்தை
விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும்.

இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.


ஒரு சில ஆய்வின் படி :

 உலகம் முழுக்க 4 கோடி பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

*  22 உலக நாடுகள் விபச்சாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்திருக்கின்றன.
 

*  உலகில் 25 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் விற்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு காலம் இருந்தது, விபச்சாரம் மறைந்து தவறு செய்திருந்த காலம் போய் இன்று ஆன் லைனில் புக் செய்து வரவழைக்கிற மோசமான காலத்தை பார்க்கும்பொழுது வேதனை அளிக்கிறது.

 உலக அழிவின் அடையாளம் 
 عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :" إن من اشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا
 கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
 ن أنس - رضي الله عنه - قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : " إن من أشراط الساعة أن يرفع العلم ، ويكثر الجهل . ويكثر الزنا ، ويكثر شرب الخمر ، ويقل الرجال ، ويكثر النساء ، حتى يكون لخمسين امرأة القيم الواحد
 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 81
 

விபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும். 

 الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ

"விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2) 
 الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ

விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)

قال رسول الله - صلى الله عليه وسلم - لعلي : يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة . رواه أحمد ، والترمذي  
، وأبو داود ، والدارمي  
 ''அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.'' (அஹ்மத், அபூதாவூத்)

 'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1.முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2.வருமானத்தை அறுத்துவிடும்
3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)


விபச்சாரத்திற்கு லைசன்ஸ் கொடுத்துவிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தையும்,மதுக்கடைகளைத் தாராளமயமாக்கி விட்டுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் அமைக்கும் அரசுகளை என்னவென்று சொல்வது ?

இன்றைய (மோசமான)நிகழ்வுகள்:
இன்று சவுதி(மக்காவில் சுற்றி உள்ள பகுதி)யில் அனாச்சாரம் பெருகுவதை கேள்விப்பட்டு நம் உள்ளங்கள் கவலை தொற்றிக்கொள்கிறது.
சினிமா தியேட்டர்கள்,மீடியா மூலம் இசையுடன் நாடக மேடைகள், (விரைவில்)இன்னும் பல தவறுகள் நடைபெற்றால்,விபச்சாரம்,மது,சூது,
இதுவெல்லாம் நடைபெற்றால் ஆசிரியப்படுவதற்கில்லை.
அல்லாஹ் பாதுகாப்பானாக !
இதை பற்றி நபி (ஸல்)அவர்கள் கூறியதை பாப்போம்:

 கஃபா இடிக்கப்படும்:

قال رسول الله صلي الله عليه و سلم  ذو السويقتين من الحبشة يخرب بيت الله عز و جل
 நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் அபிஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால் உடைய ஒரு மனிதன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை கஃபாவை இடித்து பாழாக்குவான்.(நூல்:புகாரீ)
இறையில்லம் கஃபா அனைவருக்கும் அபாயமளிக்கக் கூடியது என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அல்லாஹ் கூட சொல்கிறான்.
:
أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا
 (மக்காவை)அச்சமற்ற புனித இடமாக நாம் ஆக்கியதை அவர்கள் பார்க்கவில்லையா ? (அல் குர்ஆன் 29:67)

எனவே,அடுத்தவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ஒரு தளம்,தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளாமல் போகும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
 உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒவ்வொன்றாக நடைபெற்று வந்து "மலாஹிம்"எனப்படும்.அடுக்கடுக்கான குழப்பங்கள் தோன்றிகிற வரை கஃபா
பாதுகாப்பளிக்கும் நகரமாகவே இருக்கும்.தொடர் குழப்பங்கள் தோன்றி விட்டால் ஈஸா (அலைஹி)அவர்கள் வருகிற வரை மட்டும் இப்படிப்பட்ட சூழல் நிலவும்.
இந்த கஃபாவை பராமரிப்பவர்கள் பொதுமக்களுக்கு முழூ சுதந்திரம் அளித்து விடுவார்கள்.அதாவது இந்த ஹரம் எல்லைக்குள் இதைத்தான் செய்ய வேண்டும்,அதை செய்யக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்காமல் கட்ட விழ்த்தி விட்டு விடுவார்கள்.ஆகவே அனேக அனாச்சாரங்கள் கஃபாவின் வளாகத்திலேயே நடக்கும்.ஆகவே பராமரிப்பு இல்லாததால் மனிதத் தன்மை பறிபோன ஒரு இடத்தில "பாதுகாப்பு"என்பது இல்லாமல் போவது இயல்புதானே!

நபிகளார் காலத்திற்கு முன் வாழ்ந்த மாக்கள் இறைமறுப்பாளர்களாக இருந்தாலும் கஃபாவிற்கு தனி மரியாதை,புனிதத்தன்மையையும் மதித்தார்கள்.
ஆகவே ஆபிரஹாம் படையெடுத்து வந்த போது அல்லாஹ் பாதுகாப்பளித்தான்.

அனால் இங்கே கஃபாவை பராமரிக்கும் அரபியர்கள் அதனை மதிக்காமல்,காபாவின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அனாச்சாரங்கள் அரங்கேற வழி விட்டதினாலேயே ஹபஷாவினர் வந்து  கஃபாவை இடிக்கும்போது அல்லாஹ் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விட்டு விடுவான்.

மது: இன்றைய (மோசமான)நிகழ்வுகள்:

ஆரம்பத்தில்
வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு
அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில்,
இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும்.
எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக
இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.
வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே
மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.

மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்''
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில்  விபத்துகளில் உயிர் இழந்தவர்களின்
எண்ணிக்கை1,30,000 இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. 

கவலையான விஷயம் என்னவென்றால் படிக்கும் மாணவ மாணவிகள் போதைக்கு அடிமைகளாக இருப்பதுதான்.
அரசாங்கம் டாஸ்மார்க் மது கடைகளுக்கு அனுமதித்து போதை தரும் பொருட்களுக்கும் அனுமதி கொடுத்து ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழிக்கவும், ஒவ்வொரு உயிரையும் (போதையின் மூலம்)கொலை செய்யும் 
பட்டியலில் அரசாங்கமும் ஒரு காரணம்.

في سنن أبي داود من طريق ابن عمر
 لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه وآكل ثمنها
அப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1. மதுவைக் தயாரிப்பவர். 2. தயாரிக்க உதவுபவர். 3. அதைக் குடிப்பவர். 4. அதனை ஊற்றிக் கொடுப்பவர். 5. அதனைச் சுமந்து செல்பவர். 6. அதற்கு துணை போனவர். 7. அதனை விற்பவர். 8. அதனை வாங்குபவர். 9. அதனை அன்பளிப்புச் செய்பவர். 10. அதை விற்பனை செய்பவர்.”
                  ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹ.எண்:5091 )


 எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு ‘ரத்கதுல் கபால்’ என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘ரத்கதுல் கபால்’ என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளின் சீழ்’ என பதிலளித்தார்கள்’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.

جاء في سنن ابن ماجه عن عبد الله بن عمرو بن العاص أن النبي قال
 مَنْ شَرِبَ الْخَمْرَ وِسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صلاةٌ أَرْبَعِينَ صَبَاحاً. فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ. فَإِنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ. وَإِنْ عَادِ ـ أي في الرابعة ـ كَانَ حَقّاً عَلَى اللهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ
قَالُوا: يَا رَسُولَ اللهِ! وَمَا رَدْغَةُ الْخَبَالِ قَال
 ((عُصَارَةُ أَهْلِ النَّارِ))

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:

“மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது. அவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். 
இதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால்,
அவனுக்கு மறுமையில் “ரத்ஃகத்துல் ஃகிபாலை” குடிக்க வைப்பது
அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.               
                 
அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன? என்று வினவினார்கள்.               
அதற்கு நபி {ஸல்} அவர்கள் “அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்” என்றார்கள்.
                       ( நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118 )

  உலக அழிவின் அடையாளம்:

 قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : " إن من أشراط الساعة أن يرفع العلم ، ويكثر الجهل . ويكثر الزنا ، ويكثر شرب الخمر ، ويقل الرجال ، ويكثر النساء ، حتى يكون لخمسين امرأة القيم الواحد " . " . وفي رواية : " يقل العلم ويظهر الجهل " . متفق عليه .
'எனக்குப் பின்னர் வேறு உலக  எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரீ. 

  உலக அழிவின் அடையாளத்தின் சில அடையாளம்:
பெண்கள் குறைவான ஆடைகளை  அணிவதும்,நிர்வாணமாக திரிவதும்.மெல்லிய ஆடைகளை அணிவதும்  உலக அழிவின் அடையாளங்களில் உள்ளதாகும்.(*நூல் :முஸ்லிம்)

மக்களில் சிறந்தவர்கள்,மனித நேயர்கள்,சேவகர்கள்,அறிஞர்கள்,
பேரறிஞர்கள்,போன்ற நல்ல மனிதர்கள் மரணிப்பதும்,கேட்ட குணம் கொண்ட முட்டாள்கள் பெருகுவதும்  உலக அழிவின்அடையாளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்:ஹாகிம்)

(ரவுடி,ரவுடி அரசியல்வாதி ,அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தும் அதிகாரி போன்ற)தீய மனிதர்களின் தீங்கை அஞ்சி அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் உலக அழிவின் அடையாளமாகும்.(நூல்:தப்ரானீ )

இறுதி சமுதாயத்தினர் முதல் சமுதாயத்தினரை சபிக்காத வரை உலகம் அழியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்:அபூதாவூத்)

 இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கும் குழப்பத்தை விட்டும்,பல நெருக்கடிகளை விட்டும் யா அல்லாஹ் எங்களை பாதுகாப்பாயாக !
அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் ஈமானுடையவராக வாழும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக!

குறிப்பு வழங்கியவர்:
மௌலவி முஹம்மது அலி ஸலாஹி.

தொகுத்து வழங்கியவர்:
கம்பம் சுல்தான் ஸலாஹி.



Comments

Popular posts from this blog

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

ரமழானே வருக