ரமழானே வருக

                       ரமலானே வருக.....

onlinesalahiblogspot.com 

முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் அருட்கொடை ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது .முன்னர் வாழ்ந்த எந்த சமுதாயத்திற்கும் இந்த சிறப்பு வழங்கப்படவில்லை

வானவர்களில் சிறந்தவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹி)அவர்கள்.
நபிமார்களில் சிறந்த நபி முஹம்மது (ஸல்)அவர்கள்.
மாதங்களில் சிறந்தவை ரமழான் மாதமாகும்.நாட்களில் சிறந்தவை ஜுமுஆ தினமாகும்.இடத்தில சிறந்தவை புனித மக்காவாகும்.

فَإِذَا فَرَغْتَ فَانصَبْ  وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب  
வேலை முடிந்து விட்டால் இறை வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என இறைவன் பணிக்கிறான்.
(அல் குர்ஆன்94:7,8)
நபி (ஸல்)அவர்கள் ரமழான் மாதம் வந்து விட்டால் தனது கீழாடையை இறுக்கிகட்டிக்கொள்வார்கள் (நூல்:புகாரி)
ரமழானின் வருகைப்பற்றி:
حديث سلمان رواه ابن خزيمة في صحيحه فقال : باب في فضائل شهر رمضان إن صح الخبر ، ثم قال : حدثنا على بن حجر السعدي حدثنا يوسف بن زياد حدثنا همام بن يحيى عن علي بن زيد بن جدعان عن سعيد بن المسيب عن سلمان قال : خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : (أيها الناس ، قد أظلكم شهر عظيم ، شهر مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعاً ، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ، ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة فيما سواه ، وهو شهر الصبر ، والصبر ثوابه الجنة ، وشهر المواساة ، وشهر يزداد فيه رزق المؤمن ، من فطر فيه صائماً كان مغفرة لذنوبه ، وعتق رقبته من النار ، وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء . قالوا : ليس كلنا نجد ما يفطر الصائم ، فقال : يعطي الله هذا الثواب من فطر صائماً على تمرة أو شربة ماء أو مذقة لبن
ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒரு பர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க  கொடுக்கின்றானோ அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது.அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த ஸவாபை பேரீத்த பழத்தாலோ, ஒரு மிடர் பாலினாலோ அல்லது ஒரு மிடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. அதன்படி நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ரமளானை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா?. ஒரு பரகத்தான மாதம். குர்ஆன் இறங்கிய மாதம் என்று இந்த மாதத்தின் அறிமுகத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியும் உம்மத்தின் தெளிவும் அடங்கிய வேத புத்தகம் இறங்க அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين " . رواه البخاري 
ரமலான் மாதம் வந்து விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகிறது உலகத்தில்  உள்ள ஷைத்தான்களெல்லாம் விலங்கிடப்படுகிறார்கள் 
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

இது நமக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு.உலகத்திலே ஒவ்வொன்றுக்கும் ஒரு பருவம்
இருப்பது போல நன்மைகள் அதிகம் செய்து கொள்ளவும் நல்ல நிம்மதியான வழியை தேடிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிற ஒரு சீசன் தான் ரமலான் மாதம். ரமலான் மாதத்தை அடிந்து கொண்டால் அதிலே நீங்கள் நோன்பு வைத்து கொள்ளுங்கள் என திருமறை கூறுகிறது.
 
                                                  فمن شهد منكم الشهر فليصمه
ஆகவே உங்களில் யார் அம்மாதத்தை (ரமலானை) அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும் (குர் ஆன்- 02:185)

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)
 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)

அல்லாஹ் மற்றொரு இடத்தில் சொல்கிறான்:

شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.
வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ اللَّهُ :
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ
لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ رواه البخاري

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்
நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ) رواه البخاري

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு 
நூல் புகாரி

ரமழான் மகத்தான மாதம் ஏன் ?
இந்த மாதத்தில்தான் மகத்தான இரவு ஒன்றும் பொதிந்து இருக்கிறது.அந்த ஒற்றை இரவில் ஆயிரக்கணக்கான மாதங்களுக்கான அருள்வளங்களின் புதையல்கள் ஈட்டப்பட்டிருக்கின்றன.அந்த அருவளம் மிக்க இரவில்தான் இறைவன் தன்னுடைய மிகப்பெரும் அருளை வழங்கினான்.
انا انزلناه في ليلة مبركة
நாம் இதனை தெளிவான வேதத்தினை அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம். அல்குர்ஆன் 44:3
அந்த வேதம் எத்தகையது ?
رحمة من ربك
இது உம்முடைய இறைவனின் கருணை(யினால் உம்மீது அருளப்பட்டிருக்கின்றது) என்றே குர்ஆன் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
ஆனால்,உண்மையில் சொல்லப்போனால் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான,தூய்மையான நாள் ஆகும்.இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள்வளம் மிக்க இரவு ஆகும்.
அருள்மறை இறங்கிய மாதம்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ
"ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது”(அல் குர்ஆன்:2:185)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்” எனவும் குறிப்பிடுகின்றான்.(அல் குர்ஆன்:9:01)
எனவே, ரமழான் மாதம் அது குர்ஆனின் மாதம் அல்லாஹ்வின் வழிகாட் டல்கள் மனித சமூகத்திற்கு இறக்கியருளப்பட்ட மாதம். அதற்கு நன்றி சொல்லும் வகையிலேயே இந்த மாதம் முழுவதும் நாம் பசித்திருக்கிறோம் தாகித்திருக்கிறோம் இரவெல்லாம் நின்று
வணங்குகின்றோம்
. அல் குர்ஆனின் சிறப்பு
அல்குர்ஆன் இறக்கியருள்ளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இந்த உலகில் எத்தகைய பெரும் புரட்சிகளைச் செய்தது, அது நிகழ்த்திய சாதனைகள் என்ன, மனித உள்ளங்களில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை? என்பதையல்லாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உருவிய வாளோடு படுகொலை செய்யவந்த உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை இஸ்லாத்தின், நபிவர்களின் பாதுகாவலனாக மாற்றிய பெருமை அல்குர்ஆனைச் சாரும். ஆல்குர்ஆனின் ஓர் இரண்டு வசனங்கள் உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் உள்ளத்தில் அதிர்வை, தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது. ஈற்றில் அவர் மனிதப் புனிதனாக மாறுகின்றார்.
பக்தாதில் அன்று மிகவும் பேர் போன ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்த புழைல் இப்னு இயாழ் என்பவர் ஹரம் ஷரீபுடைய இமாமாக மாறினார் என்றால், அதற்குக் காரணம் ஓர் அல்குர்ஆனிய வசனம்தான்.
 أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ

“ஈமான் கொண்டிருந்தோருக்கு, அவர்களது  இருதயங்கள், அல்லாஹ்வையும் உண்மையிலிருந்து இறங்கிய(வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?” (அல் குர்ஆன் 57:16) 
என்ற அல்குர்ஆன் வசனம் ஏற்படுத்திய அதிர்வு புழைல் இப்னு இயாழுடைய முழு வாழ்வையுமே மாற்றியமைத்தது.
அதே அல்குர்ஆனைத்தான் நாமும் அணுதினமும் மீட்டி மீட்டி ஓதுகிறோம் பாராயணம் செய்கிறோம். அல்குர்ஆன் உமர் இப்னு கத்தாப் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வை எம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறதா? புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல் லாஹ்) போன்ற ஆயிரமாயிரம் உள்ளங்களை உசுப்பிய இந்த அல்குர்ஆன் எமது உள்ளத்தில் மாற்றத்தை, தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
குர்ஆனை நாம் ஓதுவோம்:

 عن ابن مسعود قال : قال رسول الله صلى الله عليه وسلم { : من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها ، لا أقول الم حرف ، ولكن ألف حرف ، ولام حرف ، وميم حرف } . رواه الترمذي

எவர் அல்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்குப் பத்தாகப் பெருக்கப்படும் ஒரு நன்மை வழங்கப்படும். அலிப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என நான் கூறமாட்டேன். அலிப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து  மீம் ஒரு எழுத்தாகும். (எனவே அலிப் லாம் மீம் என ஓதினால் 30 நன்மைகள் கிடைக்கும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி), ஆதாரம் : தராமி (3308), திர்மிதி (2913), அஹ்மத், ஹாகிம்.

அல்லாஹ் சொன்னதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் குர்ஆனை ஓதிக் கொண்டே இருக்கிறார். அதனை ஓதி ஓதி அதன்மீது ஈடுபாடு கொண்டிருக்கின்றமையினால் என்னிடம் கேட்பதற்கு, என்னிடம் முறையிடுவதற்கு அவருக்கு நேரமில்லை. தனது தேவைகளைக்கூட என்னிடம் கேட்க முடியாத அளவுக்கு அவர் அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார். அத்தகையோருக்கு, என்னிடம் கேட்பவர்களுக்கு கொடுப்பதைவிட நான் நிரப்பமாகக் கொடுப்பேன்.” (ஹதீஸுல் குத்ஸி


ஆரம்ப கால ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், ஸலபுகள் அல்குர்ஆனின் மூலமாக அற்புதமான வழிகாட்டல்களைப் பெற்றார்கள். அதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக் கொண்டார்கள். அந்த மாற்றம் எங்களிடம் வர வேண்டும் என்றிருந்தால், நாம் அல்குர்ஆனை அணுகும் முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
நபி (ஸல்)அவர்கள் ரமழானில் முழுமையாய் குர்ஆன் ஓதி முடிக்கும் பழக்கமுடைவராய் இருந்தார்கள்.(புகாரி)
மரணத்திற்கு முன்னால் பெற்ற ரமலானில் இரண்டு முறை முடித்தார்கள்.(புகாரி)


எச்சரிக்கை:
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَأَتَدْرُونَ مَا الْغِيبَةُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5048

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 


عَنْ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلا الْجُوعُ , وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلا السَّهَرُ  
நபி (ஸல்)அவர்கள் அருளியதாக ஹழ்ரத் அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறர்ர்கள்:நோன்பாளிகள் பலருக்கு நோன்பின் பலன் பசித்திருந்ததைத் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை.இரவில் விழித்து இருந்து வணங்குபவர்களில் பலருக்கு இரவில் விழிக்கும் சிரமத்தைத் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை.(நூல்:தர்கீப்)
1,எந்த மனிதர் பகல் முழுவதும் நோன்பு வைத்துவிட்டு இறுதியில் ஹராமான பொருளைக்கொண்டு நோன்பு திறக்கிறாரோ அவரே இந்த ஹதீஸுக்கு உட்பட்டவராவார்.எந்த அளவு நோன்புக்குப் பலன்கள் கிடைக்கின்றனவோ அவற்றைவிட அதிகமான ஹராமான பொருளைச் சாப்பிடுவதால் பாவங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.அதனால் பகல் முழுவதும் பசித்திருந்ததைத் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை.
2,ஒரு மனிதர் நோன்பு வைத்திருக்கிறார்.ஆனால் அவர் புறம் பேசுவதில் ஈடுபட்டிருக்கிறார்.அவரும் இந்த ஹதீஸுக்கு உட்பட்டவராவார்.
3,நோன்பு வைத்துக்கொண்டு பாவங்களை விட்டு நீங்கிக்கொள்ளாத மனிதர்.

خرج الإمام أحمد والنسائي من حديث أبي عبيدة ، عن النبي صلى الله عليه وسلم قال : الصيام جنة ما لم يخرقها 

அபூ உபைதா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நோன்பு ஒரு கேடயம்,அதனை உடைக்காமல் இருக்கும் வரை என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:தர்கீப்)
மற்றொரு ஹதீஸில்:
ஒரு மனிதர், யாரஸூலல்லாஹ்!நோன்பு எதனால் முறிந்து விடுகிறது?என்று கேட்டார்.பொய் பேசுவதினாலும்,புறம் பேசுவதினாலும் என்று பதிலளித்தார்கள்.
 “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறால் – ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: அஹ்மத், பைஹகீ 
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு வைத்திருந்தார்கள்.நோன்பின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாத அளவு கடினப் பசி ஏற்பட்டுவிட்டது.உயிர் போய்விடும் அளவுக்கு ஏற்பட்டுவிட்டது.நபித்தோழர்கள் நபி (ஸல்)அவர்களிடம் இதனை முறையிட்ட பொது நபியவர்கள் ஒரு கோப்பையை அப்பெண்களிடம் அனுப்பி அவ்விருவரையும் அதில் வாந்தி எடுக்கச் சொன்னார்கள்.அவ்விருவரும் வாந்தி எடுத்த பொது இறைச்சி துண்டுகளும்,புதிய இரத்தமும் வெளிவந்தன.நபித்தோழர்கள் திகைத்து நின்றனர்.அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் இவ் இவர்கள் அல்லாஹுத்தஆலா அருளிய ஹலாலான உணவினால் நோன்பு வைத்து ஹராமான பொருளைச் சாப்பிட்டுருக்கிறார்கள்.அதாவது,அவ்விரு பெண்களும் மனிதர்களைப் பற்றி புறம் பேசி இருக்கின்றனர்.என்று வினவினார்கள்.
 
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?
  • இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

  • ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
  • தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கிஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.
  • இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
  • இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
  • உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
  • இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
    அன்பின் இஸ்லாமியச் சகோதரசகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...!
  • இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
  • வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
  • பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
  • புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
  • இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
  • அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
  • சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!


நாம் என்ன செய்ய வேண்டும்
ரமழான் மாதத்தை வரவேற்பதற்கு முன் முதலாவதாக நாம் என்ன செய்ய வேண்டும்?
ரமழானின் மகத்துவத்தை,அதன் தனிச்சிறப்பை,அதன் நோக்கத்தை,அதன் கண்ணியத்தை அவை பற்றிய உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் எவ்வளவோ பாவங்களி்ல்  ஈடுபட்டிருப்போம் அல்லது பாவம் செய்வதற்கு உடந்தையாக கூட இருந்திருப்போம். அந்தக் காரியங்களை எல்லாம் ரமழான் வருவதற்கு முன் கை விட்டு விட வேண்டும். கை விட்டு விடுவது மட்டுமன்றி, நாம் முன்னர்  செய்த பாவங்களை அல்லாஹ்விடம் முறையிட்டு மன்றாடி, இதன் பிறகு இநத்ப்பாவங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்று அல்லாஹ்விடம் சத்தியப்பிரமாணம் செய்து விட்டு, இந்த ரமழனை ஆரம்பித்தால் மாத்திரமே இந்த ரமழானை வரவேற்றதற்குரிய முழுப் பயனை பெற்றுக்கொள்வோம்.
பாவங்களில் மூழ்கிப்போன நாம், இதோ சங்கைக்குரிய ரமழான் மாதம்
வருகிறது நம்முடைய பாவங்களை கரிக்க.பயன்படுத்திக்கொள்வோம்.  இல்லை இல்லை அதில் நாம் திருந்தி சுத்தப்படுத்திக் கொள்வோம்.


நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன்சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.
எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதோடு நம்மை நோக்கி  வரும் ரமளானின் நன்மைகளை எதிர்பார்த்து வாஞ்சையோடு அமல் செய்து ரப்பின் ரிளாவையும், லிக்காவையும் பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்புரிவானாக.

ரமழானை அடைந்து முழு நோன்பை அடையும் உடல் ஆரோக்கியத்தையும்,
புனித இரவாம் லைலத்துல் கத்ரை அடையும் பாக்கியத்தையும,
புனித ஈதுல் பித்ர் பெருநாளை அடையும் பாக்கியத்தையும் யாஅல்லாஹ் எங்கள் அனைவருக்கும் இந்த நற்பாக்கியத்தை  தருவாயாக !

மௌலவி ஹாபிழ்
கம்பம் சுல்தான் ஸலாஹி

Comments

Post a Comment

Popular posts from this blog

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்