நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

        நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்
onlinesalahi.blogspot.com

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் (அவனுடைய)தூதரக்குக் கீழ்ப்படியுங்கள்.(மாறுசெய்து)உங்களுடைய செயல்களை வீணாக்கியும் விடாதீர்கள்.(அல் குர்ஆன் 47:33)
அல்லாஹ் சிலர் சிலரை விட மேன்மையாக்கி வைத்திருக்கின்றான்.
புகழால்,பதவியால்,செல்வத்தால்,படிப்பால்,கல்வியால் பல படித்தரங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றான்.அல்லாஹ் நமக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் செய்த அமல்களை வீணடிப்பதற்கு  பல காரணம் இருந்த போதிலும் இரண்டு முக்கியமானவை.
1,الحسد பொறாமை
2,رياء  முகஸ்துதி
முதலாவதாக பொறாமை:
நமக்கு முன்னாள் உயர்நிலையில் இருப்பவரை கண்டு பொறாமை படுவது, நாம் செய்யும் அமல்களை அழித்து விடும்.
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்தி­ருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது .அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொறாமை சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடிய நோயாகவும் இருக்கிறது. அன்பு கொண்டு பழக முடியாமல் தன்னைத் தானே நொந்து கொண்டு வாழ்வதை பார்க்க முடிகிறது.
   رواه أبو داود 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத்

இந்த பொறாமையின் எல்லை எது வரை ?
இந்த பொறாமை கொலை வரை சேர்த்து விடும் அளவிற்கு கொடிய நோய்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقينلَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ  إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ 
நபியே! – ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்;றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன் என – காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாதவன் – கூறினார். அதற்கு மற்றவர், பயக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் எனக் கூறினார். என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும் – என்றும் கூறினார் – பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்துவிட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.(அல் குர்ஆன் 5:27,30)
அன்று ஷைத்தான் மூலம் ஏற்பட்ட பொறாமையின் குணம் காபில் முதல் இன்று யூதர்களின் வரை வந்து,நம்(முஸ்லிம்களுக்கி)மிடையே பரவி நம் அமல்களை வீணாக்கிக்கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது கவலைதான் மிச்சம்.

யூதர்களின் பொறாமையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ
அல்லாஹ் தனது அருளை (மற்ற)மனிதர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள்மீது இவர்கள் பொறாமை கொள்கிறார்களா?(அல் குர்ஆன் 4:54)
அதாவது இறுதித்தூதர் நபி(ஸல்)அவர்களுக்கு மாபெரும் நபித்துவத்தை இறைவன் வழங்கியதற்காக அவர்களின்மீது யூதர்கள் பொறாமைப் பட்டார்கள்.இஸ்ரவேலர் அல்லாத அரேபிய இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபித்துவம் வழங்கப்பட்டுள்ளதே என்ற பொறாமையினாலையே நபி (ஸல்)அவர்களை ஏற்க அவர்கள் மறுத்தார்கள்.
وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ
வேதக்காரர்களின் பெரும்பாலோர்,நீங்கள் இறை நம்பிக்கை கொண்ட பிறகு இறைமறுப்பாளர்களாக உங்களை மாற்றிவிட விழைகிறார்கள்.உண்மை தெளிவாகத் தெரிந்த பிறகும்கூட அவர்கள் கொண்ட பொறாமையே இதற்குக் காரணமாகும். (அல் குர்ஆன் 2:109)
இந்த ஆயத்திற்கு ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் கூறுகிறார்கள்:
யூதர்கள் கொடுத்துவந்த எல்லாத் தொல்லைகளையும் தாங்கிக் கொள்ளுமாறும் இங்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.எதிரிகளின் தாக்குதலுக்குப் பதிலடி தராமல் பொறுமை காக்க வேண்டும் என இதன் மூலம் இறைவன் ஆணையிட்டான்.(பார்க்க:இப்னு கஸீர்)
 இன்று இஸ்லாமிய வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி,கண்டு காணமுடியாத யூதர்கள் இஸ்லாத்தை அழிக்கவும்,பல சதித்திட்டங்களும்,முஸ்லிம்களுக்கிடையே நெருக்கடிகளும் ஊடுருவி வருவதே பொறாமைதானே காரணம்.

படிப்பினை:யார் நம்மீது பொறாமை கொண்டாலும் பொறுமை என்பது கவசமாகும்.
ஒரு கவிஞன் கூறுவான்:
اصبر علي حسد الحسود     فان صبرك قاتله
فالنار تأكل يعضها    ان لم تجد ما تأكله
"பொறாமைக்காரனின் பொறாமையின் மீது பொறுமையாய் இரு!
உனது பொறுமையே அவனை கொன்று விடும்.
நெருப்பு தன்னையே தின்று விடுகிறது.
அதற்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லையென்றால்.
இந்த(பொறாமை)குணம் நம்மிடம் நீடித்து இருக்குமானால் இதன் முடிவு மனநோயாளியால் பாதிக்கப்படும்.(உண்மைதான்)
ஒருவரின் மீது பொறாமை கொண்டால் நமக்கு நிம்மதி இருக்காது,தூக்கம் இருக்காது.தன் குடும்பத்தின்(மனைவி,பிள்ளைகள்,தாய் தந்தைகளின்)மீது
பாசம் இருக்காது.காரணம் அவரின் மீது பொறாமையின் காரணத்தால் எரிச்சல்,புலம்பல்,இருப்பதினால்தானே.

பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும்

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَرْبِ بْنِ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، أَنَّ مَوْلَى الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ لاَ أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.
நூல் : திர்மிதீ
இந்தச் செய்தி அஹ்மத்

இரண்டாவதாக முகஸ்துதி:
உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.
    
قال الله تبارك وتعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمِل عملًا أشرك فيه معي غيري، تركتُه وشِرْكَه رواه مسلم.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

عَنْ سَلَمَةَ قَالَ سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் அவர்  (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (நூல் :புஹாரி )




நாம் செய்யும் அமல்களை முகஸ்துதிக்காக செய்யும்பொழுது அமல்கள் அனைத்தும் வீணடிக்கப்படுகிறது.
தொழுகை,தர்மம்,ஹஜ்,நோன்பு,பொது சேவைகள் இப்படி பல காரியங்களை முகஸ்துதிக்காக செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தொழுகை:
 
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ * الَّذِينَ هُمْ عَنْ صَلاتِهِمْ سَاهُونَ * الَّذِينَ هُمْ يُرَاءُونَ
மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு!  அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள் . அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
 
இன்று முஸ்லிம்களிடத்தில் பிரதான ஒரு அமல் என்று சொன்னால் தொழுகைதான்.
நபிமார்களும்,ஸஹாபாக்களும்,நல்லோர்கள்,இமாம்கள் போன்றவர்களெல்லாம் இறைச்சத்துடன் தொழுது வந்ததையும்,நபி (ஸல்)அவர்கள் தொழுகையின் இறைச்சமும்,பேணுதலும்,அதன் முக்கியத்துவமும் குறித்து எவ்வளவு ஆழமாக சொல்லியிருப்பார்கள்.
 
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :  إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ
அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மறுமை நாளில் முதன் முதலில் தொழுகையைப் பற்றியே விசாரனை செய்யப்படும். அது ஒழுங்காக  பரிபூரணமாக நிறைவேற்றியிருந்தால் அவனுடைய மற்ற அமல்களும் சரியாகவே இருக்கும். அது ஒழுங்காக   இல்லாதிருந்தால் அவனுடைய மற்ற அமல்களும் சீர்கெட்டதாகவே இருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத்  (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.

தர்மம் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ 
وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)

இறைவன் கொடுத்த அருட்கொடைகளை பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்று பல நபிமொழியில் வந்துள்ளது. எவர் இறைபொருத்ததிற்காக செலவழிக்காமல் பிறர் பார்க்க வேண்டும் புகழ வேண்டும் என்று தர்மங்களை கொடுப்பவரின் நிலமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்) இறைவன் இவரை பார்த்து உலகில் உனக்கு நான் செல்வத்தை தந்தேனே அதை எவ்வழியில் செவழித்தாய் என்பான். அந்நபர் இறைவா நான் உன் வழியில்தான் செலவிட்டேன் என்பான். இறைவன் எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழ வேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய் என்று கூறி அவரை முகம் குப்புர நரகத்தில் இழுத்துச் சென்று போடுவான். (ஆதாரம்: முஸ்லிம்)


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
"செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை மறுமை நாளில் இறைவன் பார்க்கவும் மாட்டான்; தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவனே நஷ்டவாளி" என்றார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: முஸ்லிம்
عن أبي ذر، عن النبي صلى الله عليه وسلم قال: ((ثلاثةٌ لا يكلمهم الله يوم القيامة، ولا ينظر إليهم، ولا 
يزكيهم، ولهم عذابٌ أليمٌ))، قال: فقرأها رسول الله ثلاث مرارٍ، قال أبو ذر: خابوا وخسروا، من هم يا رسول الله؟ قال: ((المسبل إزاره، والمنان، والمُنَفِّقُ سلعته بالحلف الكاذب))؛ رواه مسلم.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான்;
அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்;
நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (தரையில் படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்ரிலி க் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 

மேற்காணும் இரண்டு (கெட்ட)குணங்களும் அல்லாஹ்வின் நல்லடியார்களான முஃமின்களிடத்தில் அறவே இருக்காது.
தன் அல்லாஹ் திருமறையில் கூறுவான்:
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ 
அவர்கள் எத்தகையோரென்றால்,தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள்.
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ 
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால்,ஜகாத்தை(முறைப்படி பேணுதலாக)செய்து விடுகிறவர்கள்.
(இவர்கள் வெற்றியாளர்கள்) (அல் குர்ஆன் 23:2,4)

மேலும் 
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا  إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا  
மேலும் அ(ல்லாஹ்வாகிய  அ )வன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும்,அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
(உணவை உண்போரிடம்)"உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம்,அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்.உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ,அல்லது (நீங்கள் நமக்கு)நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை(என்று நல்லடியார்கள் கூறுவார்கள்) (அல் குர்ஆன் 76:8,9)
ஆனால் (முனாஃபிக்) நயவஞ்சகனிடத்தில் மேற்காணும் இரண்டு (கெட்ட)குணங்களும் இருக்கும்.
தன் அல்லாஹ் திருமறையில் கூறுவான்:
إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا  
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக்கருது)கின்றனர்:இன்னும் அவனோ,அவர்களை வஞ்சிக்கக்ககூடியவனாக இருக்கின்றான்.இன்னும்,அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால்,சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள்.மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள்.இன்னும்,அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை.(அல் குர்ஆன் 4:142)
 நபி(ஸல்)அவர்கள் இறைநம்பிக்கையாளர்,நயவஞ்சகர்,இறைமறுப்பாளர் ஆகிய மூவருக்கும் மூன்று பேர் கொண்ட குழுவொன்றை உவமையாக்  கூறுவார்கள்:
அவர்கள் மூவரும் ஆற்றுக்குப் போனார்கள்.முதலில் இறைநம்பிக்கையாளர் ஆற்றுக்குள் இறங்கி அதைக் கடந்து (பத்திரமாக மறு கறைக்குச்)சென்றார்.
அடுத்து நயவஞ்சகர் இறங்கினார்.அவர்(மறு கரையிலிருந்த)இறைநம்பிக்கையாளரைச் சென்றடையப் போனபோது (எதிர் கரையில் இருந்த)இறைப்பறுப்பாளர் "இதோ!என்னிடம் வந்துவிடு,உனக்கு ஏதேனும் அபாயம் நேரலாம் என நான் அஞ்சுகிறேன்"என்று அவரை அழைத்தார்.உடனே இறைநம்பிக்கையாளர் "இதோ என்னிடம் வந்துவிடு இன்னின்ன வசதிகள் யாவும் உள்ளன"என்று தம்மிடம் உள்ளவற்றைப் பட்டியலிட்டுக் கூறினார்.அப்போது அந்நயவஞ்சகர் (யாரிடம் செல்வது என்று தெரியாமல்)அவ்விருவருக்கிடையே தீராத தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டார்.இறுதியில் வெள்ளம் வந்து அவரை மூழ்கடித்தது.
அவ்வாறுதான் ஒரு நயவஞ்சகர் தமக்கு இறப்பு வரும்வரை சந்தேகத்திலும்,ஐயத்திலும் இருந்து கொண்டே இருப்பார்.
(பார்க்க:இப்னு கஸீர்)
ஆகவே நயவஞ்சகனின் தன்மையை விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்று வாழ்ந்த நல்லோர்களைப் போன்று வாழ தவ்பிக் செய்வானாக!
முஹம்மது இப்னு அஸ்லம் (ரஹ்)அவர்களின் பணிவிடையாளர் முஹம்மது இப்னுல் காஸிம் தமது எஜமான் கூறியதாக சொல்கிறார்கள்:
"எனது இரண்டு மலக்களும்  கூட என்னைப் பார்க்க முடியாமல் மறைந்திருந்து அமல்செய்யும் வாய்ப்பு இருந்தால் நான் அதையும் செய்திருப்பேன்.
அதேபோல ஒருமுறை அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.பிறகு அந்த அறையிலிருந்து அழும் சப்தமும் வந்து கொண்டிருந்தது.இது சம்மந்தமாக
அவர்களின் மனைவியிடம் கேட்கப்பட்டபோது,"முஹம்மது இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் இந்த வீட்டிற்க்குள் சென்று குர்ஆனை ஓதி ஓதி அழுவார்கள்.அறையைவிட்டு வெளியே வரும்போது தாம் அழுதது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முகத்தைக் கழுவிக் கொள்வதோடு,கண்ணுக்கு சுர்மாவும் இட்டுக் கொள்வார்கள்"என்பதாக பதில் கூறினார்கள்.(நூல்:ஸஹீஹ் வஸாயர் ரஸூல் 3/302)
நமது முன்னோர்கள் பிறருக்குக் காட்டுவதற்காக செய்தால் தாங்கள் செய்த நல்ல அமல்கள் அழிந்து போய் விடுமோ என்று பயந்து இந்த அளவிற்கு மறைந்து மறைந்து அமல் செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
 من أحب لله و أبغض لله و أعطى لله و منع لله فقد استكمل الإيمان  
யார் அல்லாஹ்விற்காக பிரியம் கொளவ்தும்,அல்லாஹ்விற்காக வெறுப்பதும்,அல்லாஹ்விற்காக கொடுப்பதும்,அல்லாஹ்விற்காக மறுப்பதும் ஈமானின் பரிபூரணமாகும்.(நூல் அபூதாவூத்)
எனவே அல்லாஹ்விற்காவே அமல் செய்து மேற்காணும் கெட்ட குணத்தை விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !ஆமீன் 

குறிப்பு தந்தவர்கள்:
ஸலாஹி உலமா பேரவை.

தொகுத்து வழங்கியவர்:
கம்பம் சுல்தான் ஸலாஹி.


அ லா


 

Comments

Post a Comment

Popular posts from this blog

ரமழானே வருக

இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்