உலகத்தில் கவனம் தேவை

             பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
                  உலகத்தில் கவனம் தேவை
  وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
மேலும் இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே தவிர வேறொன்றுமில்லை.அவர்கள் அறிந்தவர்களாக இருப்பின் நிச்சயமாக
மறுமையின் வீடு,அதுவே (நித்திய)வாழ்க்கையாகும்.(அல் குர்ஆன் 29:64)

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம். (அல் குர்ஆன் 10:24)
இவ்வுலக வாழ்க்கையின் எழிலுக்கும் கவர்ச்சிக்கும் அதன் முடிவுக்கும் விரைவான அழிவுக்கும் ஓர் உவமையை அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதர்கள் இவ்வுலகின் சுகபோகங்களில் மயங்கி கிடக்கிறார்கள்.அதுவோ அவர்களை துசச்மாகக் கருதுகிறது.உலக இன்பத்தின் இயல்பே,அதைத் தேடிச் செல்வோரைக் கண்டு ஓடுவோரை அது தேடிச் செல்லும்.

ஆங்கில அறிஞன் சொல்வான்:
நான் சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது உலகத்தை பந்தாக விளையாடினேன்,வாலிப வயதை அடைந்ததும் உலகம் என்னை பந்தாக விளையாடுகிறது.
வேறொரு வசனங்களில் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இவ்வுலக வாழ்கைக்குப் பூமியின் தாவரங்களை உதாரணமாக கூறியுள்ளான்.

وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا 
மேலும் (நபியே)இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்கு கூறுவீராக.(அது)வானத்திலிருந்து நாம் இறக்கி வைத்த நீரைப் போல இருக்கிறது.பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதனைக் குடித்து)அதனுடன் கலந்தன:(அதனால் பயிர்கள் செழித்தன இந்நிலைக்குப்பின்)அது காய்ந்த சருகாகி அவற்றைக் காற்றுகள் (அடித்துச் சென்று)பரத்தி விடுகிறது.(இதுவே இவ்வுலுக வாழ்க்கைக்கு உதாரணமாகும்)மேலும்,அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையோனாக இருக்கிறான்.(அல் குர்ஆன் 18:45)

முந்திய வசனத்தின் அற்ப உலகத்தைப் பற்றியும் அதன் இன்பங்கள் விரைவிலேயே அழியக்கூடியவை என்பதைப் பற்றியும் குறிப்பிட்ட இறைவன் கீழ் காணும் வசனம் சொர்க்கத்திற்கு ஆர்வமூட்டி அதன்பால் அழைக்கிறான் .
وَاللَّهُ يَدْعُو إِلَىٰ دَارِ السَّلَامِ وَيَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيم
அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான்.அவன்,தன் நாடுவோரை நேரான வழியில் செலுத்துகின்றான்.(அல் குர்ஆன் 10:25)
சொர்க்கத்திற்கு அமைதி இல்லம் (தாருஸ் ஸலாம்)எனும் பெயரையும் சூட்டுகின்றான்.அதாவது சோதனைகள்,துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைதியான இல்லமாகும் சொர்க்கம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?" என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.

நூல்:முஸ்லிம் 

إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ, وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا, فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ؟ فَاتَّقُوا الدُّنْيَا, وَاتَّقُوا النِّسَاءَ, فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ, كَانَتْ فِي النِّسَاءِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ  இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது. (நூல்:முஸ்லிம்)
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்,  உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கால சூழல் வரும்  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்றைய தினம் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்.
எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் வஹ்னை ஏற்படுத்தி விடுவான் என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். 
உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது என்று பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத்)
 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
 ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 21:35)
 
 لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافراً منها شربة ماء
உலகத்தை அல்லாஹ் கொசுவின் ஒரு சிறகுக்கு சமமாக மதித்திருந்தால் தன்னை நிராகரிப்பவருக்கு (காபிர்களுக்கு)தாகம் தீர்ப்பதற்கு தண்ணீரைக்கூட வழங்கி இருக்க மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:திர்மீதி)
حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي
 உலகத்தின் மீது பிரியம் வைப்பது எல்லா பாவங்களுக்கும் வேர் ஆகும் நூல்:பைஹகீ 
 
ஒவ்வொரு முஸ்லிமுடைய தெளிவான குறிக்கோள் இந்த மறுமை வெற்றியேயாகும். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது கிடையாது. ஆனால் மறுமை வாழ்க்கையோ முடிவில்லா நிரந்தரம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை சுவைத்தே ஆக வேண்டும். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள்…. நேற்று இருந்தவன் இ ன்று இல்லை….. இன்று வாழக்கூடியவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் மரணித்தே தீருவார்கள்…. அல்லாஹ் ஏற்படுத்திய நியதி இது …. அது நிச்சயம்… 

குறிப்பு தந்தவர்கள் 
ஸலாஹி உலமா பேரவை.
 
தொகுத்து வழங்கியவர் 
மௌலவி ஹாபிழ் 
கம்பம் சுல்தான் ஸலாஹி

Comments

  1. எல்லோருக்கும் பயன் தரக்கூடிய நல்ல தகவல்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

ரமழானே வருக

இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்