வளமான வாழ்விற்கு இஸ்லாம் ஒன்றே வழி
வளமான வாழ்விற்கு இஸ்லாம் ஒன்றே வழி
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
மனிதன் சீரான பாதையில் தன வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் இறைவன் வையகத்தில் தீர்க்கதரிசிகளை இறக்கி வைத்திருக்கின்றான்.அவர்களின் மூலம்,அவர்கள் தம் கூட்டத்தவர்களுக்கு நல்லொழுக்கங்களையும்,நற்பண்புகளையும்,ஓரிறைக் கொள்கைகளையும் எடுத்தோத வைத்திருக்கின்றான் என்பதனை நோக்கும் பொழுது தன்னால் படைக்கப்பட்ட மானிடன்,தன்னை சந்திக்கும் நேரத்தில் நல்லவனாக,நாணயமானவனாக சந்திக்க வேண்டும் என்ற மேலான எண்ணத்தில்தான் அவ்வாறு செய்திருக்கின்றான் என்பதை நினைத்து பேரானந்தம் அடைகின்றோம்.
உலக மக்களின் தோற்றத்தைப் பரவலாக படைத்த இறைவன் அதுபோலவே அவர்களின் வார்த்தைகளையும்,சொற்களையும்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் நளினங்களையும்,கருத்தாழங்களையும் அவரவர் அறிவிற்கு (சிந்தனைக்கு)ஏற்ப மாறுபடவும் செய்திருக்கின்றான். இதிலென்ன விந்தை என்றால் அவனால் கொடுக்கப்பட்ட அறிவும்,மூளையும்,மதியும் ஒன்றரைக்கிலோ எடை என்ற அளவிலும்,வடிவத்திலும்,உருவாக்கப்பட்ட முறையிலும் ஒன்றாகவே இருக்கின்றது என்பதுவே.
அறிவை பெருக்கும் முறையையும் அல்லாஹுத்தஆலா அழகாக எடுத்துக்காட்டுகிறான்.
أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها
அவர்கள் குர்ஆனின் கருத்துக்களையும் வஷயங்களையும் சிந்தனை செய்து பார்க்கவேண்டாமா?அல்லது அவர்களின் இதயங்களில் பூட்டுகள் இடப்பட்டு விட்டனவா? (அல் குர்ஆன் 47:24)
வாழ்க்கையின் தத்துவங்களையும்,ஒழுக்கவியல்களையும் நானிலம் சிறக்கும் அளவிற்கு வாழ்க்கையின் நெறிமுறைகளையும் காண்பித்துக் கொடுத்த நபிமார்கள் ரஸூல்மார்களின் அறிவுத்திறன்களும்,நடைமுறை விஷயைங்கள் யாவும் இதயத்தில் நீங்கா இடம்பிடிக்கின்றன.
நபி (ஸல்)அவர்களின் பொன்மொழிகளில்தான் எத்துணை வார்த்தை அழகுகள்!ஒழுக்கவியல்கள்,மனிதனை தூய்மையாக்கும் இலட்சியம்,நட்பியல்,அறிவியல்,விஞ்ஞானம்,மருத்துவக் கருத்துக்கள்,உடல் கூறு ஆராய்ச்சிகள்,இல்லறவியல்,அரசியல்,பொருளாதார கொள்கைகள்,நாட்டு மேம்பாட்டு சித்தாந்தம்,நாட்டைக் காக்கும் இராணுவ போர்முறை நடவடிக்கைகள்,தலைமைத்துவ குணங்கள்,நீதி பரிபாலனம் போன்ற ரத்தின கருத்துக்கள்.
நடைமுறையில் செய்யக்கூடிய ஒவ்வொரு நெறிமுறைகளை கடைபிடிக்கத்தான் குறள் ஏவுகிறது!ஆனால் எப்படி கடைபிடிப்பது எந்தெந்த நேரங்களில் என வகுத்து கொடுத்தது குர்ஆனும்,ஹதீஸுமே என்பதில் இல்லை.இல்லவே இல்லை.
அமரும்பொழுது:
தனித்தனியாக ஆளுக்கொரு இடமாக ஸஹாபாக்கள் அமர்ந்திருத்தை பார்த்து நபி (ஸல்)அவர்கள் எனக்கு என்ன நேர்ந்தது!ஆணவம் பிடித்தவர்கள் போல் உக்கார்ந்திருக்க உங்களை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள் நூல்:திர்மிதி
இந்நபிமொழி ஒருவன் அமர்கின்ற ஒழுக்கத்தை பறைசாற்றுகிறது.
ஏனெனில் பெருமைக் கொண்டவர்கள்,உனக்கு நான் சளைத்தவனில்லை என்ற இறுமாப்பு கொண்டு தள்ளித்தள்ளி அமர்வார்கள்.அருகில் அமரமாட்டார்கள்.அப்படி நீங்கள் அமர வேண்டாம் என்பதை எவ்வளவு எச்சரிக்கையுடன் உணர்த்துகிறது.
ஹுதைபா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் மேலும் வழிப்படையச்செய்கிறது.நபி (ஸல்)அவர்களின் நாவினால் சபிக்கப்பட்டவனாக ஒருவன் இருக்கின்றான்,எவனென்றால் ஒரு மஜ்லிஸின் நடுவில் அமருபவன். நூல்:திர்மிதி
இந்நபிமொழி மூலம் நான்கு நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு மத்தியில் வந்தமர்வது ஷைத்தானின் செயலாக இருக்கின்றது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு இதமாக காண்பிக்கிறார்கள்.
நடக்கும்பொழுது:
மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாடிய இடத்திற்கு செல்ல நடப்பது அவசியமாக உள்ளது.அதுபொழுது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குர்ஆனே நம்மவர்களுக்கு தெளிவாக்கிறது.
ولا تمش في الأرض مرحا
பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம் (அல் குர்ஆன் 17:37)
மேலும் பார்வையை கீழ் நோக்கியதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.பல பாகங்களிலும் நோட்டமிடவேண்டாம் என நயமான நற்சிந்தனையை அகிலத்தாருக்கு அள்ளித்தருகிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ
மேலும் (நபியே!)விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக!
தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்.(அல் குர்ஆன் 24:31)
பார்வை மேல்நோக்கி போவதால்தான் வம்புகளும்,தும்புகளும் உலகத்தில் ஏற்படுகின்றன என்பதனை எவரும் மறுக்க இயலாது.பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றால் ஷைத்தான் அவர்களின் நடையினை மாற்றானின் கண்களுக்கு அழகுப்படுத்தி காண்பிக்கின்றான் என நபி (ஸல்)
அவர்கள் அருளினார்கள்.பெண்ணினம் மேம்பட எத்துணை அழகாய் தெளிவு படுத்துகின்றார்கள்.
உணவு நீர் அருந்தும் பொழுது:
நீர் அருந்தும் முறையிலும் உணவு உட்கொள்ளும் முறையிலும் நபி (ஸல்) அவர்கள் சொல்லியவைகளில் எத்தனையோ மருத்துவ நெறிமுறைகளைக் கடைபிடிக்கச் செய்திருக்கிறார்கள்.
நீங்கள் நீர் அருந்தினால் அவசர அவசரமாக ஒட்டகம் அருந்துவது போல் ஒரே மூச்சில் அருந்த வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:திர்மிதி
இந்த நபி மொழியின் நம் புருவத்தினை மேலே உயர்த்துகிறது.அதன் உள்ளார்ந்த கருத்துக்களையும் அதனின் விபரீதங்களையும் கேள்விப்படும்பொழுது மெய்சிலிர்த்து போகின்றோம்.
மனிதனின் இயற்கை நியதி என்னவென்றால் நீராகாரமோ,உணவோ,மனிதனின் தொண்டையை அடையும்பொழுது அத்தொண்டையின் இரண்டு வகையான குழாய்களை இறைவன் நியமித்து வைத்து இருக்கின்றான்.
ஒரு மனிதன் உயிர்வாழ அத்தியாவசியமான மூச்சுக் குழாயை அமைத்து மூச்சு இழுக்கவும்,விடவும் வைத்துள்ளான்.
மற்றொன்று உணவுக் குழாய்,இதன் வழியாகத்தான் உண்ணும் உணவும்,பருகும் நீரும் வயிற்றுக்குள் சென்று ஆகாரப்பையை அடைகிறது.
உணவோ நீரோ தொண்டை வழியாக இறங்கும் பொழுது மூச்சுக் குழாயின் ஆரம்பத்தில் (ebiglottis- எபிகுளோட்டிஸ்) என்ற மூடி மூச்சுக் குழாய்க்குள் நீரோ,உணவோ செல்ல விடாமல் தடுத்துக் கொள்கிறது.
இது மனித உடலமைப்பாகும்.
இதற்கு மாறாக அவசர அவசரமாக உண்ணும் பொழுதும்,பருகும் பொழுதும்,அந்த மூச்சுக்குழாயின் மூடி,நம் அவசர நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறது.
அதனால் எற்படும் விளைவுதான் "பொறை ஏறுதல்".
நாம் சாதரணமாக காற்று அடங்கிய சக்கரத்தில் காற்று வெளியாகும் பொழுது விரலை வைத்தால் நம் விரல்களை மேல்நோக்கி தள்ளிவிடும் சக்தி கொண்டது.
அதுபோலவே உணவோ,நீரோ மூச்சுக் குழாயின் வழியாக சென்றால் அவைகளை வெளியே வேகமாக தள்ளுவதால், அவ்வுணவுகள் மூக்கின் வழியாக வெளியேறி வேதனைகளை ஏற்படுத்தவும் செய்கின்றது.அதனின் உச்சகட்டம் உயிரையே பறித்து விடும் அளவிற்கு போய்விடுகிறது.
இந்த மருத்துவக்குறிப்புகள் 20 ம் நூற்றாண்டில்தான் காணக்கிடைக்கிறது.அனால் நபி(ஸல்) அவர்கள் 6ம் நூற்றாண்டிலேயே கொடுத்து விட்டார்கள்.
தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். ஒரே மூச்சில்
குடிக்காமல், அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை
வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும்.
அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு
ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.
தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து
காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே
பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
ஒருபோதும் தண்ணீரை அண்ணாந்திக் குடிக்க வேண்டாம்.
இஸ்லாத்தில் தண்ணீர் குடிக்கும் முறை:
அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார்.
“ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும்,
“பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.
“உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி
அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.
“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.
ஒருவர் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம்
உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்
உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்
“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ
உறங்கும் விதம்:
மல்லாந்த நிலை
ஒரு மனிதன் தன் கால்களின் ஒன்றை மற்றொரு காலின் மீது போட்டு தன் முதுகின் மேல் மல்லாந்து படுக்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் (நூல்:முஸ்லிம்)
கால் மேல் கால் போட்டு படுப்பதோ,உட்காருவதோ,பெருமை பிடித்தவனின் அடையாளம்.ஆணவம் பிடித்தவனின் அடையாளம்.
குப்புறப் படுப்பது கூடுமா?
குப்புறப் படுப்பது ஒழுக்கவியலை பாதிக்குமா?ஆம் குப்புறபடுப்பது கெட்ட ஒழுக்கமே என்பது மட்டுமல்ல பலவித நோய்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் தன் வயிற்றில் குப்புறபடுப்பதை
கண்டார்கள்.இது ஒரு வகை படுக்கை.இதை அல்லாஹ் பிரியப்படமாட்டான் எனக் கூறியதாக ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழிஅவர்கள் கூறினார்கள்.(நூல்:திர்மிதி)
இப்படுக்கை ஷைத்தானுக்கு மிகவும் உகப்பான அவன் விரும்பும் படுக்கையாகும்.ஏனெனில் ஹழ்ரத் லூத் (அலைஹி)கூட்டத்தினர்களின் படுக்கை இப்படித்தான் இருந்தது.
இதனை பயன் படுத்திய ஷைத்தான் ஒரு மாபெரும் மானக்கேடான மற்றும் இறைவனுக்கு மிகவும் வெறுப்பான மிகவும் இழிவான,அவர்களின் அழிவுக்கும் காரணமான,ஏன்?பூமியையே வான அளவில் மேலே உயர்த்தி அப்படியே புரட்டி போடக்கூடிய அளவிற்கு படுமோசமான,அத்துணை நோய்களுக்கும் தலையாய வியாதியை உள்ளடக்கிய,மருத்துவ வல்லூனர்களுக்கே சவால் விடக்கூடிய homosex (ஹோமோ செக்ஸ்)என்று சொல்லப்படும் ஓரினச் சேர்க்கையும் aids (எய்ட்ஸ்)போன்ற ஆட்கொல்லி நோயையும் வெற்றி கரமாக தூண்டிவிட்டான்.
மல்லாந்தும் படுக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.மாறாக கேட்ட ஒழுக்கமான கால் மேல் கால் இட்டுத்தான் படுக்கக்கூடாது என்பதனை உணர வேண்டும்.மல்லாந்து கால் மேல் கால் இட்டு படுக்கக்கூடாது,குப்புறப் படுக்கக்கூடாது என்றால் எப்படித்தான் மனிதன் தன் ஓய்வை கழிக்க உறங்குவது என்ற நெற்றி சுருங்க ":ச்சு"கொட்டி விளக்கும் தேடுவதும் எனக்குக் தெரிகிறது.
நபி (ஸல்)அவர்களின் தூங்கும் விதம்
நபி(ஸல்) அவர்கள் தூங்கும் போது வலது உள்ளங்கையை வலது கண்ணத்தின் கீழ் வைத்து இறைவனை துதித்து (துஆ ஓதி) விட்டு தூங்குவார்கள். பேரீத்த மரத்தின் நார்களால் நிரப்பப்பட்ட தோல்பை அவரது தலையணையாக இருந்தது. மிருதுவான படுக்கையை விரும்பியதில்லை.
ஹள்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் நீங்கள் தூங்கும் போது உங்கள் வலது கையை வலது கன்னத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றும், வேறொரு அறிவிப்பில் வலது புறமாக நீங்கள் ஒருக் கணித்து படுங்கள் என்றும் கூறினார்கள். (நூல் : புகாரி)
நபி ( ஸல் ) அவர்கள்
இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக்
கீழே வைத்து அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் ஹீதைஃபா ( ர ) நூல் திர்மிதி ( 6314 )
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
நபி ( ஸல் ) அவர்கள்
இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக்
கீழே வைத்து அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் ஹீதைஃபா ( ர ) நூல் திர்மிதி ( 6314 )
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
நபி ( ஸல் ) அவர்கள்
இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக்
கீழே வைத்து அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் ஹீதைஃபா ( ர ) நூல் திர்மிதி ( 6314 )
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
இருதயம் மனிதனின் இடது பக்கம் தான் உள்ளது. இடது பக்கம் ஒருக்கணித்து படுப்பதால் (Blood Circulation) இரத்த ஓட்டம் மந்தமாகிவிடுகிறது. வலது பக்கம் ஒருக்கணித்து படுப்பதால் இந்த பிரச்சனை ஏற்படாது மட்டுமின்றி இருதயம் மற்றும் வயிற்றுக் கோளாறிலிருந்து மனிதன் பாதுகாக்கப்படுவதாக யூ.கே. வின் ஓர் ஆராய்ச்சி நிலையம் தகவல் கொடுத்துள்ளது. மேலும் வலது புறம் ஒருக்கணித்து படுப்பதால் இதயம் தொங்கவிடப்பட்ட பொருளைப் போன்று இருக்கிறது. இதனால் மனிதனுக்கு வரம்பு கடந்த ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில்லை. சிறு சப்தம் கேட்டாலே எழுந்து விடுவான். (நூல் : சுன்னத்தே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்).
உறங்கும் இடம்
திரையில்லா வான வெளியில் படுத்து உறங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் (நூல்:திர்மிதி)
படுத்துறங்கும் மனிதனுக்கு மேலாக மறைப்போ அல்லது கூரையோ அல்லது துணி மற்றும் கயிறினால் கூட அமைந்திருக்கலாம்.உறங்குவது தவறு.கூடாது என்பதனை இவ்வற்புத நபிமொழி நவில்கிறது.ஏன்?
இரவின் பிற்பகுதியில் வானமேடையில் பறவை ஒன்று பறக்கும்.அப்பறவையின் நிழல் இம்மனிதனின் மீது பட்டுவிட்டால் தீராத நோய்களுக்கு ஆளாகிறான்.அவனின் உயிரையும் உறிஞ்சிவிடும்.எப்படி பாம்போ,தேளோ தீண்டுவதால் மனித உயிர் உதிர்கின்றதோ அதுபோல இறைவன் அப்பறவைக்கு கொடுத்து இருக்கிறான்.
(நம்மவர்களை அல்லாஹ் மேற்கூறப்பட்ட நோய்,நோவினைகளை விட்டும் என்றும் பாதுகாப்பானாக!)
நபி (ஸல்) அவர்களின் வாழ்வுதனை அணுஅணுவாய் பின் பற்றுவதில்தான் ஈடேற்றம்,உயர்வும் மகிமையும் அடங்கிக் கிடக்கிறது.வேறு எங்கும் தேடி அலைய வேண்டிய அவைசியமே இல்லை என்பதனை சர்வ சக்தியும் படைத்திட்ட இறைவன் எடுத்து வியம்புகிறான்.
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறையிலே உங்களுக்கு மகத்தான
"அழகிய முன் மாதிரி அமைந்திருக்கிறது"(அல்குர்ஆன்:33-21)என தேடித் திணற வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை இருக்கவும் முடியாது.எனவே மானிடனின் வளமான வாழ்விற்கு இஸ்லாம் ஒன்றே வழி என்பதனை மிகத் தெளிவாய் புரிந்து செயல் பட்டு வாழ்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன்.
கவிதை:சந்திக்கும் போதெல்லாம் பேச வைத்து விடும் பிரிந்து மறவா நண்பர்கள்.
மௌலவி தாஹிர் ஸலாஹி
சக்கிமங்கலம்.
குறிப்பு தந்தவர்:
மௌலவி ஹாபிழ் ஹாஜி
s ஜமால் முஹ்யீத்தீன் சிராஜி.
இமாம் திருபுவனம்.
ஸலாஹிகளின் ஒத்துழைப்போடு
தொகுத்து வழங்கியவர்;
கம்பம் மௌலவி ஹாபிழ்
அ மு சுல்தான் ஸலாஹி.
ما شاء الله لا قوة إلا بالله
ReplyDeleteMasha Allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteசுல்தான் ஸலாஹி மௌலானா
மிக அருமை
புதுகை முனீாி