நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்
நாம் செய்த அமல்களை பாதுகாப்போம் onlinesalahi.blogspot.com يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் (அவனுடைய)தூதரக்குக் கீழ்ப்படியுங்கள்.(மாறுசெய்து)உங்களுடைய செயல்களை வீணாக்கியும் விடாதீர்கள்.(அல் குர்ஆன் 47:33) அல்லாஹ் சிலர் சிலரை விட மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். புகழால்,பதவியால்,செல்வத்தால்,படிப்பால்,கல்வியால் பல படித்தரங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றான்.அல்லாஹ் நமக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் செய்த அமல்களை வீணடிப்பதற்கு பல காரணம் இருந்த போதிலும் இரண்டு முக்கியமானவை. 1,الحسد பொறாமை 2,رياء முகஸ்துதி முதலாவதாக பொறாமை: நமக்கு முன்னாள் உயர்நிலையில் இருப்பவரை கண்டு பொறாமை படுவது, நாம் செய்யும் அமல்களை அழித்து விடும். மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதா...