Posts

Showing posts from March, 2018

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

        நாம் செய்த அமல்களை பாதுகாப்போம் onlinesalahi.blogspot.com يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் (அவனுடைய)தூதரக்குக் கீழ்ப்படியுங்கள்.(மாறுசெய்து)உங்களுடைய செயல்களை வீணாக்கியும் விடாதீர்கள்.(அல் குர்ஆன் 47:33) அல்லாஹ் சிலர் சிலரை விட மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். புகழால்,பதவியால்,செல்வத்தால்,படிப்பால்,கல்வியால் பல படித்தரங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றான்.அல்லாஹ் நமக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் செய்த அமல்களை வீணடிப்பதற்கு  பல காரணம் இருந்த போதிலும் இரண்டு முக்கியமானவை. 1,الحسد பொறாமை 2,رياء  முகஸ்துதி முதலாவதாக பொறாமை: நமக்கு முன்னாள் உயர்நிலையில் இருப்பவரை கண்டு பொறாமை படுவது, நாம் செய்யும் அமல்களை அழித்து விடும். மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்தி­ருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதா...

இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்

        இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும் اقترب للناس حسابهم وهم في غفلة معرضون மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ ஈமான் கொணடவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்–உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். அல்குர்ஆன் 47:33 முஸ்லிம்களின் வாழ்வில் வேற்றுக் கலாசாரத்தின் ஊடுருவல் எல்லை மீறிப்போய் விட்டது. அவர்களின் சிந்தனையும் திசை திருப்பப்பட்டு விட்டது. அவர்களின் நம்பிக்கையும் நோக்கமும் நிலை குலைந்து விட்டன. அவர்களின் ஒழுக்கம் அழிந்தே போய் விட்டது. எங்கும் துரோகமே தலை விரித்தாடுகின்றது.  இன்று கலிமா சொன்னவர்களாகவும்,அதன்படி அமல் செய்தாகினும் நமது கண்களுக்கு முன் அனாச்சாரம்,அட்டுழீயம், லஞ்சம்,ஊழல்,வட்டி ,மார்க்கத்திற்கு மாறான தலைமை பதவி,கொலை,திருட்டு, விபச்சாரம், நேர்மை...