ரமழானே வருக
ரமலானே வருக..... onlinesalahiblogspot.com முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் அருட்கொடை ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது .முன்னர் வாழ்ந்த எந்த சமுதாயத்திற்கும் இந்த சிறப்பு வழங்கப்படவில்லை வானவர்களில் சிறந்தவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹி)அவர்கள். நபிமார்களில் சிறந்த நபி முஹம்மது (ஸல்)அவர்கள். மாதங்களில் சிறந்தவை ரமழான் மாதமாகும்.நாட்களில் சிறந்தவை ஜுமுஆ தினமாகும்.இடத்தில சிறந்தவை புனித மக்காவாகும். فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب வேலை முடிந்து விட்டால் இறை வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என இறைவன் பணிக்கிறான். (அல் குர்ஆன்94:7,8) நபி (ஸல்)அவர்கள் ரமழான் மாதம் வந்து விட்டால் தனது கீழாடையை இறுக்கிகட்டிக்கொள்வார்கள் (நூல்:புகாரி) ரமழானின் வருகைப்பற்றி: حديث سلمان رواه ابن خزيمة في صحيحه فقال : باب في فضائل شهر رمضان إن صح الخبر ، ثم قال : حدثنا على بن حجر السعدي حدثنا ...