வளமான வாழ்விற்கு இஸ்லாம் ஒன்றே வழி
வளமான வாழ்விற்கு இஸ்லாம் ஒன்றே வழி لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) மனிதன் சீரான பாதையில் தன வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் இறைவன் வையகத்தில் தீர்க்கதரிசிகளை இறக்கி வைத்திருக்கின்றான்.அவர்களின் மூலம்,அவர்கள் தம் கூட்டத்தவர்களுக்கு நல்லொழுக்கங்களையும்,நற்பண்புகளையும்,ஓரிறைக் கொள்கைகளையும் எடுத்தோத வைத்திருக்கின்றான் என்பதனை நோக்கும் பொழுது தன்னால் படைக்கப்பட்ட மானிடன்,தன்னை சந்திக்கும் நேரத்தில் நல்லவனாக,நாணயமானவனாக சந்திக்க வேண்டும் என்ற மேலான எண்ணத்தில்தான் அவ்வாறு செய்திருக்கின்றான் என்பதை நினைத்து பேரானந்தம் அடைகின்றோம். உலக மக்களின் தோற்றத்தைப் பரவலாக படைத்த இறைவன் அதுபோலவே அவர்களின் வார்த்தைகளையும்,சொற்களையும்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் நளினங்களையும்,கருத்தாழங்களையும் அவரவர் அறிவிற்கு (சிந்தனைக்கு)ஏற்ப மாறுபடவும் செய்திரு...